அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3689

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ:‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الْمُزَفَّتِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ ‏


قَالَ قِيلَ لأَبِي هُرَيْرَةَ مَا الْحَنْتَمُ قَالَ الْجِرَارُ الْخُضْرُ

நபி (ஸல்), தார் பூசப்பட்ட பாத்திரம், ‘ஹன்த்தம்’, பேரீச்சை மரத்தின் அடிப் பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

“அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ‘ஹன்த்தம்’ என்பது என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “சுட்ட களிமண்ணாலான பச்சைநிற சாடிகள்’ என்று பதிலளித்தார்கள்.

Share this Hadith:

Leave a Comment