அத்தியாயம்: 36, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3706

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ :‏

نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ قَالَ فَقَالَ قَدْ زَعَمُوا ذَاكَ ‏.‏ قُلْتُ أَنَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ قَدْ زَعَمُوا ذَاكَ


حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ طَاوُسٍ، قَالَ قَالَ رَجُلٌ لاِبْنِ عُمَرَ أَنَهَى نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ قَالَ نَعَمْ ‏.‏ ثُمَّ قَالَ طَاوُسٌ وَاللَّهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ ‏.‏

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரத்தில் ஊறவைக்கப்பட்ட பானங்களைத் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “அவ்வாறுதான் மக்கள் கூறுகின்றார்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குத் தடை விதித்தார்களா?” என்று (மீண்டும்) கேட்டேன். இப்னு உமர் (ரலி), “அப்படித்தான் மக்கள் கூறுகின்றார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்)


குறிப்பு :

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சுட்ட களிமண் பாத்திரத்தில் பானங்களை ஊற்றி வைக்க வேண்டாமெனத் தடை செய்தார்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) “ஆம்” என்று பதிலளித்தார்கள் என்பதாக தாவூஸ் (ரஹ்) கூறுகின்றார்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறே நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று தாவூஸ் (ரஹ்) கூறினார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment