அத்தியாயம்: 37, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3857

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالَ أَبُو كُرَيْبٍ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، عَنْ أَبِي عَوْنٍ الثَّقَفِيِّ، عَنْ أَبِي صَالِحٍ الْحَنَفِيِّ، عَنْ عَلِيٍّ :‏

أَنَّ أُكَيْدِرَ، دُومَةَ أَهْدَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ثَوْبَ حَرِيرٍ فَأَعْطَاهُ عَلِيًّا فَقَالَ ‏”‏ شَقِّقْهُ خُمُرًا بَيْنَ الْفَوَاطِمِ ‏”


‏وَقَالَ أَبُو بَكْرٍ وَأَبُو كُرَيْبٍ ‏”‏ بَيْنَ النِّسْوَةِ ‏”‏

தூமத்துல் ஜந்தல் எனும் பகுதியின் குறுநில மன்னரான உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை  அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டுவிடுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி)


குறிப்புகள் :

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில், அலீ (ரலி) அவர்களின் மனைவியின் பெயரும் அன்னாரின் அன்னையின் பெயரும் அன்னாரின் சிற்றப்பா ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் பெயரும் ‘ஃபாத்திமா’வாகும்.

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) மற்றும் அபூகுறைப் (ரஹ்) ஆகிய இருவரின் வழி அறிவிப்பில், “(உங்கள் வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிடுங்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment