அத்தியாயம்: 37, பாடம்: 24, ஹதீஸ் எண்: 3916

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ :‏

أُتِيَ بِأَبِي قُحَافَةَ أَوْ جَاءَ عَامَ الْفَتْحِ أَوْ يَوْمَ الْفَتْحِ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامِ أَوِ الثَّغَامَةِ فَأَمَرَ أَوْ فَأُمِرَ بِهِ إِلَى نِسَائِهِ قَالَ ‏ “‏ غَيِّرُوا هَذَا بِشَىْءٍ ‏”‏ ‏

மக்கா வெற்றி ஆண்டில் / வெற்றி நாளில் நபி (ஸல்) அவர்களிடம் அபூகுஹாஃபா வந்தார்கள் / கொண்டுவரப்பட்டார்கள். அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்), “இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

அபூகுஹாஃபா அவர்கள், அபூபக்ரு (ரலி) அவர்களின் தந்தையாவார்.

Share this Hadith:

Leave a Comment