அத்தியாயம்: 37, பாடம்: 30, ஹதீஸ் எண்: 3947

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا يُحَدِّثُ :‏

أَنَّ أُمَّهُ، حِينَ وَلَدَتِ انْطَلَقُوا بِالصَّبِيِّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُحَنِّكُهُ قَالَ فَإِذَا النَّبِيُّ صلى الله عليه وسلم فِي مِرْبَدٍ يَسِمُ غَنَمًا ‏.‏ قَالَ شُعْبَةُ وَأَكْثَرُ عِلْمِي أَنَّهُ قَالَ فِي آذَانِهَا

உம்மு ஸுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது, நபி (ஸல்) (பேரீச்சம் பழத்தை) மென்று அச் சிறுவனின் வாயிலிடுவதற்காக நபியவர்களிடம் அவனை (எங்கள் குடும்பத்தார்) கொண்டுசென்றனர். அப்போது நபி (ஸல்) ஒட்டகத் தொழுவமொன்றில் ஓர் ஆட்டிற்குச் சூடிட்டு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

“(இதை எனக்கு அறிவித்த) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்), “அதன் காதுகளில் (அடையாளமிட்டுக்கொண்டிருந்தார்கள்) என்று கூறியதாக நினைக்கிறேன்” என்று (இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment