அத்தியாயம்: 39, பாடம்: 21, ஹதீஸ் எண்: 4058

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ أَبِي عُمَرَ، – وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ – قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ :‏ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اشْتَكَى الإِنْسَانُ الشَّىْءَ مِنْهُ أَوْ كَانَتْ بِهِ قَرْحَةٌ أَوْ جَرْحٌ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِإِصْبَعِهِ هَكَذَا وَوَضَعَ سُفْيَانُ سَبَّابَتَهُ بِالأَرْضِ ثُمَّ رَفَعَهَا ‏”‏ بِاسْمِ اللَّهِ تُرْبَةُ أَرْضِنَا بِرِيقَةِ بَعْضِنَا لِيُشْفَى بِهِ سَقِيمُنَا بِإِذْنِ رَبِّنَا ” ‏


قَالَ ابْنُ أَبِي شَيْبَةَ ‏”‏ يُشْفَى ‏” وَقَالَ زُهَيْرٌ ‏”‏ لِيُشْفَى سَقِيمُنَا ” ‏

ஒருவருக்கு உடல்நலக் குறைவோ கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஆட்காட்டி விரலைப் பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு)விட்டு அதை உயர்த்தி, “அல்லாஹ்வின் பெயரால்! எங்களில் சிலரது உமிழ்நீர், இந்தப் பூமியின் மண்ணில் கலந்து, எங்கள் இறைவனின் நாட்டத்துடன் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்புகள் :

சொந்த ஊர் மண்ணுக்கும் மனித உமிழ்நீருக்கும் அல்லாஹ்வின் நாட்டத்தால் சில நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உண்டு என்று இந்த ஹதீஸின் மூலம் அறிய முடிகிறது.

இப்னு அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், ‘குணப்படுத்தும்’ என்பதைக் குறிக்க “யுஷ்ஃபா“ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில் (எங்களில் நோயுற்றவரை குணப்படுத்துவதற்கு) ‘லி யுஷ்ஃபா ஸகீமுனா’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment