அத்தியாயம்: 39, பாடம்: 37, ஹதீஸ் எண்: 4136

وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ عِنْدَنَا ابْنُ جَعْفَرٍ – عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ قَالَ :‏

كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَوْمًا عِنْدَ هَدْمٍ لَهُ فَرَأَى وَبِيصَ جَانٍّ فَقَالَ اتَّبِعُوا هَذَا الْجَانَّ فَاقْتُلُوهُ ‏.‏ قَالَ أَبُو لُبَابَةَ الأَنْصَارِيُّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ الْجِنَّانِ الَّتِي تَكُونُ فِي الْبُيُوتِ إِلاَّ الأَبْتَرَ وَذَا الطُّفْيَتَيْنِ فَإِنَّهُمَا اللَّذَانِ يَخْطِفَانِ الْبَصَرَ وَيَتَتَبَّعَانِ مَا فِي بُطُونِ النِّسَاءِ


وَحَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي أُسَامَةُ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ أَنَّ أَبَا لُبَابَةَ مَرَّ بِابْنِ عُمَرَ وَهُوَ عِنْدَ الأُطُمِ الَّذِي عِنْدَ دَارِ عُمَرَ بْنِ الْخَطَّابِ يَرْصُدُ حَيَّةً بِنَحْوِ حَدِيثِ اللَّيْثِ بْنِ سَعْدٍ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), ஒரு நாள் தமது கட்டட இடிபாடுகளுக்கு அருகிலிருந்தபோது (மெல்லிய வெண்ணிறப்) பாம்பு ஒன்று மின்னுவதைக் கண்டார்கள். உடனே, “இந்தப் பாம்பை விரட்டிப் பிடித்துக் கொல்லுங்கள்” என்று கூறினார்கள். (அங்கிருந்த) அபூலுபாபா அல்அன்ஸாரீ (ரலி), “வீட்டிலிருக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்துள்ளார்கள்; குட்டை வால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் தவிர. ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; பெண்களின் வயிற்றிலுள்ளதைக் கலைத்துவிடும் என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூலுபாபா (ரலி) வழியாக நாஃபிஉ (ரஹ்)


குறிப்பு :

அல்-லைஸ் பின் ஸஅத் (ரஹ்) வழி அறிவிப்பு, “இப்னு உமர் (ரலி) (தம் தந்தை) உமர் (ரலி) வீட்டிற்கு அருகிலுள்ள கோட்டையொன்றின் அருகில் பாம்பொன்றைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவர்களைக் கடந்து அபூலுபாபா (ரலி) சென்றார்கள்…” என்று ஆரம்பமாகிறது.

Share this Hadith:

Leave a Comment