அத்தியாயம்: 4, பாடம்: 17, ஹதீஸ் எண்: 614

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ أَبِي لَيْلَى ‏ ‏قَالَ ‏
‏لَقِيَنِي ‏ ‏كَعْبُ بْنُ عُجْرَةَ ‏ ‏فَقَالَ أَلَا أُهْدِي لَكَ هَدِيَّةً خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقُلْنَا قَدْ عَرَفْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ ‏ ‏قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَعَلَى آلِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏كَمَا صَلَّيْتَ عَلَى آلِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَعَلَى آلِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏كَمَا بَارَكْتَ عَلَى آلِ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ‏
‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏وَمِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏أَلَا أُهْدِي لَكَ هَدِيَّةً ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏وَعَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏وَعَنْ ‏ ‏مَالِكِ بْنِ مِغْوَلٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ وَبَارِكْ عَلَى ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَلَمْ يَقُلْ اللَّهُمَّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்த ஒருபோது, “(அல்லாஹ்வின் தூதரே!) உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலாம் கூற வேண்டுமென அறிந்திருக்கின்றோம். ஆனால், உங்கள்மீது நாங்கள் ஸலவாத் கூறவேண்டியது எப்படி?” என்று நாங்கள் கேட்டோம். அப்போது அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம, பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்.

[பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ வளநலன் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் வளநலன் வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்] என்று கூறுங்கள்” எனக் கற்றுத் தந்தார்கள்.

அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

குறிப்பு :

கஅப் பின் உஜ்ரா (ரலி) என்னைச் சந்தித்தபோது, “உங்களுக்குப் பெறுமதி மிக்க வெகுமதி ஒன்றை வழங்கட்டுமா?” எனக் கேட்டுவிட்டு மேற்கண்ட பெறுமதி மிக்க ஹதீஸை வெகுமதியாக அவர் வழங்கியதாக அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) குறிப்பிடுகிறார்.

மிஸ்அர் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களுக்குப் பெறுமதி மிக்க வெகுமதி ஒன்றை வழங்கட்டுமா?” எனும் கேள்வி இடம்பெறவில்லை.

அல்ஹகம் (ரஹ்) வழி அறிவிப்புகளில், “அல்லாஹும்ம” என்ற சொல் இல்லாமல் “வபாரிக் அலா முஹம்மதின் …” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment