அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 667

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏قَالَ

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ إِذَا اسْتَأْذَنَّكُمْ إِلَيْهَا

قَالَ فَقَالَ ‏ ‏بِلَالُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ قَالَ فَأَقْبَلَ عَلَيْهِ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَسَبَّهُ سَبًّا سَيِّئًا مَا سَمِعْتُهُ سَبَّهُ مِثْلَهُ قَطُّ وَقَالَ أُخْبِرُكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَقُولُ وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் மனைவியர் உங்களிடம் (தொழுவதற்காகப்) பள்ளிவாசல்களுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்” என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக அவர் மகன் ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

குறிப்பு :

“இந்த ஹதீஸை என் தந்தை அறிவித்தபோது (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ் (ரஹ்), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவர்களைத் தடுப்போம்’ என்று கூறினார். உடனே (என் என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ்வை நோக்கி மிகக் கடுமையாக ஏசினார்கன். அதைப் போன்று அவர்கள் ஏசியதை நான் கேட்டதே இல்லை. பிறகு, ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை உனக்கு அறிவிக்கிறேன். ஆனால், நீயோ அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம் என்று கூறுகிறாயே?’ என்றார்கள்” என்பதாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறியதும் பதிவாகியுள்ளது.

Share this Hadith:

Leave a Comment