حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ وَابْنُ رَافِعٍ قَالَا حَدَّثَنَا شَبَابَةُ حَدَّثَنِي وَرْقَاءُ عَنْ عَمْرٍو عَنْ مُجَاهِدٍ عَنْ ابْنِ عُمَرَ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ائْذَنُوا لِلنِّسَاءِ بِاللَّيْلِ إِلَى الْمَسَاجِدِ
فَقَالَ ابْنٌ لَهُ يُقَالُ لَهُ وَاقِدٌ إِذَنْ يَتَّخِذْنَهُ دَغَلًا قَالَ فَضَرَبَ فِي صَدْرِهِ وَقَالَ أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقُولُ لَا
“பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களுக்குச் செல்ல நீங்கள் அனுமதியளியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தெரிவித்தார்கள்.
‘வாகித்’ என அழைக்கப்பட்ட, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய மகன், “அவ்வாறு அனுமதி கொடுத்தால் அவர்கள் அதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தம் புதல்வருடைய நெஞ்சில் அடித்து, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதை உனக்கு அறிவிக்கின்றேன். ஆனால் நீ முடியாது என்று மறுக்கின்றாயா?” என்று (கடிந்து) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)