அத்தியாயம்: 4, பாடம்: 33, ஹதீஸ் எண்: 684

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ ‏ ‏وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏مَعْنٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏قَالَ

سَأَلْتُ ‏ ‏مَسْرُوقًا ‏ ‏مَنْ ‏ ‏آذَنَ ‏ ‏النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا الْقُرْآنَ ‏ ‏فَقَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُوكَ ‏ ‏يَعْنِي ‏ ‏ابْنَ مَسْعُودٍ ‏ ‏أَنَّهُ ‏ ‏آذَنَتْهُ ‏ ‏بِهِمْ شَجَرَةٌ

நான் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம், “ஜின்கள் குர்ஆனைச் செவிமடுத்த அந்த இரவில் ஜின்கள் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் “ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப் பற்றித் தெரிவித்தாக உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment