و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي عَوْنٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ قَالَ :
قَالَ عُمَرُ لِسَعْدٍ قَدْ شَكَوْكَ فِي كُلِّ شَيْءٍ حَتَّى فِي الصَّلَاةِ قَالَ أَمَّا أَنَا فَأَمُدُّ فِي الْأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الْأُخْرَيَيْنِ وَمَا آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ذَاكَ الظَّنُّ بِكَ أَوْ ذَاكَ ظَنِّي بِكَ
و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا ابْنُ بِشْرٍ عَنْ مِسْعَرٍ عَنْ عَبْدِ الْمَلِكِ وَأَبِي عَوْنٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ بِمَعْنَى حَدِيثِهِمْ وَزَادَ فَقَالَ تُعَلِّمُنِي الْأَعْرَابُ بِالصَّلَاةِ
உமர் (ரலி) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (கூஃபா நகர) மக்கள் (என்னிடம்) முறையிட்டுள்ளனர் (உங்கள் விளக்கம் என்ன?)” என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் (ரலி), “நான் (தொழுகையின்) முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுவித்துக் காட்டிய முறையைப் பின்பற்றுவதில் எந்தக் குறையும் நான் செய்யவில்லை” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்” அல்லது “உங்களைப் பற்றி எனது எண்ணமும் அதுவே” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
குறிப்பு :
மிஸ்அர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாட்டுப்புறத்து மக்கள் எனக்குத் தொழுகையைக் கற்றுத்தருகின்றார்களா?” என்று (ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கேட்டதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.