و حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ ح و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَتَقَارَبَا فِي اللَّفْظِ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ عَبَّادِ بْنِ جَعْفَرٍ يَقُولُ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ سُفْيَانَ وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ وَعَبْدُ اللَّهِ بْنُ الْمُسَيَّبِ الْعَابِدِيُّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ قَالَ :
صَلَّى لَنَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ بِمَكَّةَ فَاسْتَفْتَحَ سُورَةَ الْمُؤْمِنِينَ حَتَّى جَاءَ ذِكْرُ مُوسَى وَهَارُونَ أَوْ ذِكْرُ عِيسَى مُحَمَّدُ بْنُ عَبَّادٍ يَشُكُّ أَوْ اخْتَلَفُوا عَلَيْهِ أَخَذَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَعْلَةٌ فَرَكَعَ وَعَبْدُ اللَّهِ بْنُ السَّائِبِ حَاضِرٌ ذَلِكَ
وَفِي حَدِيثِ عَبْدِ الرَّزَّاقِ فَحَذَفَ فَرَكَعَ وَفِي حَدِيثِهِ وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو وَلَمْ يَقُلْ ابْنِ الْعَاصِ
நபி (ஸல்) (ஒரு நாள்) மக்காவில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ’அல்முஃமினூன்’ (எனும் 23ஆவது) அத்தியாயத்தை ஓதலானார்கள். அதில் மூஸா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பற்றிய (23:45ஆவது) வசனம் அல்லது ஈஸா (அலை) அவர்களைப் பற்றிய (23:50ஆவது) வசனம் வந்ததும் நபி(ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டுவிட்டது. உடனே (அவர்களால் தொடர்ந்து ஓத முடியாமல்) ருகூஉச் செய்துவிட்டார்கள். அந்தத் தொழுகையில் நானும் கலந்துகொண்டேன்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரலி)
குறிப்புகள் :
நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்ட வசனம் குறித்து முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) ஐயத்துடன், பிற அறிவிப்பாளர்களுக்கு வேறுபட்டு அறிவிக்கின்றார்.
அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) வழி அறிவிப்பில், “அத்தோடு நிறுத்திக் கொண்டு நபி (ஸல்) ருகூஉச் செய்துவிட்டார்கள்” என்று காணப்படுகிறது.
இமாம் நவவீ (ரஹ்) அவர்களின் முக்கியக் குறிப்பு:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரின் பெயராக ‘அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ்’ பதிவாகியுள்ளது பிழையாகும். இவர், நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அம்ரிப்னில் ஆஸ் அல்லர். மாறாக, நபித்தோழர்களுக்குப் பிற்காலத்தவரான அப்துல்லாஹ் பின் அம்ரில் ஹிஜாஸீ என்பவராவார். ‘இப்னுல் ஆஸ்’ எனும் கோத்திரப் பெயர் நீக்கத்துக்குரியது (“அத்தாரீக்” – இமாம் புகாரீ மற்றும் இபுனு அபீஹாத்தம், ரஹ்- அலைஹிம்).