அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 695

حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ فُضَيْلُ بْنُ حُسَيْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏زِيَادِ بْنِ عِلَاقَةَ ‏ ‏عَنْ ‏ ‏قُطْبَةَ بْنِ مَالِكٍ ‏ ‏قَالَ

صَلَّيْتُ وَصَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَرَأَ ‏ ‏ق وَالْقُرْآنِ الْمَجِيدِ ‏ ‏حَتَّى قَرَأَ ‏ ‏وَالنَّخْلَ ‏ ‏بَاسِقَاتٍ ‏ ‏قَالَ فَجَعَلْتُ أُرَدِّدُهَا وَلَا أَدْرِي مَا قَالَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்த(ஒரு)போது நான் தொழுதேன். (அத்தொழுகையில்) “காஃப் வல்குர்ஆனில் மஜீத்” (என்று தொடங்கும் 50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் “வந்நக்ல பாசிகா(த்)தின்” எனும் (10ஆவது) வசனத்தை அவர்கள் ஓதியபோது, நானும் அதைத் திரும்ப ஓதலானேன்; ஆனால், அவர்கள் ஓதியது எனக்குப் (பொருள்) புரியவில்லை.

அறிவிப்பாளர் : குத்பா பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment