حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ :
عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ عَنْ عَمِّهِ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصُّبْحَ فَقَرَأَ فِي أَوَّلِ رَكْعَةٍ وَالنَّخْلَ بَاسِقَاتٍ لَهَا طَلْعٌ نَضِيدٌ وَرُبَّمَا قَالَ ق
“நான் நபி (ஸல்) அவர்களுடன் ஸுப்ஹுத் தொழுகை தொழுதேன். முதல் ரக்அத்தில் நபி (ஸல்) கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்) எனும் (50:10ஆவது) வசன(அத்தியாய)த்தை” என்றும் சில வேளைகளில், “காஃப் எனும் (50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்” என்றும் என் தந்தையின் சகோதரர் (குத்பா பின் மாலிக்-ரலி) கூறுவார்கள்.
அறிவிப்பாளர் : குத்பா பின் மாலிக் (ரலி) வழியாக ஸியாத் பின் இலாக்கா (ரஹ்)