حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ أَخْبَرَنَا مَرْوَانُ بْنُ مُحَمَّدٍ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ عَنْ قَزْعَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ :
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ قَالَ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ وَكُلُّنَا لَكَ عَبْدٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும், “ரப்பனா! ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல் அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்தி அஹக்கு மா காலல் அப்து வ குல்லுனா ல(க்)க அப்து. அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த வலா முஃத்திய லிமா மனஃத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்” என்று கூறுவார்கள். (பொருள் : “எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் நிரம்ப, நீ நாடும் இன்ன பிறவும் நிரம்ப புகழனைத்தும் உனக்கே உரியது! புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள்தாம்” அடியார்களின் கூற்றுகளில், “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர்; நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர்; எவ்வளவு செல்வத்தை உடையவராக இருப்பினும் அது, அவருக்கு உன்(விசாரணைப்) பிடியிலிருந்து தப்பிக்கப் பயன்படாது” எனக் கூறுவது மிகவும் தகுதி வாய்ந்த கூற்றாகும்).
அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)