அத்தியாயம்: 4, பாடம்: 44, ஹதீஸ் எண்: 761

حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏أَنَّ ‏ ‏بُكَيْرًا ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏كُرَيْبًا ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏

‏أَنَّهُ رَأَى ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الْحَارِثِ ‏ ‏يُصَلِّي وَرَأْسُهُ ‏ ‏مَعْقُوصٌ ‏ ‏مِنْ وَرَائِهِ فَقَامَ فَجَعَلَ يَحُلُّهُ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏فَقَالَ مَا لَكَ وَرَأْسِي فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِنَّمَا مَثَلُ هَذَا مَثَلُ الَّذِي ‏ ‏يُصَلِّي وَهُوَ مَكْتُوفٌ ‏

அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் தமது தலைமுடியைப் பின்பக்கமாகக் கொண்டையிட்டுத் தொழுதுகொண்டிருப்பதை அப்பதுல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவர்கள் எழுந்து சென்று அவருடைய கொண்டையை அவிழ்த்து விட்டார்கள். அவர் தொழுது முடித்ததும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி, “உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் எனது தலைக் கொண்டையை அவிழ்த்துவிட்டீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறு தொழுவது, கைகளைப் பின்பக்கம் கட்டிக் கொண்டு தொழுவதைப் போன்றதாகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமை குரைப் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment