அத்தியாயம்: 4, பாடம்: 49, ஹதீஸ் எண்: 788

حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَكِّيٌّ ‏ ‏قَالَ ‏ ‏يَزِيدُ ‏ ‏أَخْبَرَنَا قَالَ ‏

كَانَ ‏ ‏سَلَمَةُ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَ الْأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ الْمُصْحَفِ فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا مُسْلِمٍ ‏ ‏أَرَاكَ ‏ ‏تَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَ هَذِهِ الْأُسْطُوَانَةِ قَالَ رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَتَحَرَّى ‏ ‏الصَّلَاةَ عِنْدَهَا ‏

ஸலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந்நபவீயில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் நான், “அபூ முஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேனே (என்ன காரணம்)?” என்று கேட்டேன். அதற்கு ஸலமா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் (ஆகவேதான் நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா இப்னுக் அக்வஃ (ரலி) வழியாக யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment