அத்தியாயம்: 4, பாடம்: 07, ஹதீஸ் எண்: 579

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ الْقُرَشِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏الْحُكَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏ ‏رَضِيتُ بِاللَّهِ رَبًّا ‏ ‏وَبِمُحَمَّدٍ ‏ ‏رَسُولًا وَبِالْإِسْلَامِ دِينًا غُفِرَ لَهُ ذَنْبُهُ ‏
‏قَالَ ‏ ‏ابْنُ رُمْحٍ ‏ ‏فِي رِوَايَتِهِ مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ وَأَنَا أَشْهَدُ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏قَوْلَهُ وَأَنَا ‏

“முஅத்தினின் தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் (இறுதியில்) ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரஸூலன், வபில் இஸ்லாமி தீனா’ (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு வணக்கத்துக்கு உரியவன் வேறில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழி கூறுகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மது (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்) என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

குறிப்பு: முஹம்மது பின் ரும்ஹு (ரஹ்) அறிவிப்பில், (‘அஷ்ஹது'(உறுதிமொழிகிறேன்) என்பதற்குப் பதிலாக) ‘வ அன அஷ்ஹது’ (நானும் உறுதிமொழிகிறேன்) என்று இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment