அத்தியாயம்: 40, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4156

وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يُؤْذِينِي ابْنُ آدَمَ يَقُولُ يَا خَيْبَةَ الدَّهْرِ ‏.‏ فَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ ‏.‏ فَإِنِّي أَنَا الدَّهْرُ أُقَلِّبُ لَيْلَهُ وَنَهَارَهُ فَإِذَا شِئْتُ قَبَضْتُهُمَا ‏”‏

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) “காலத்தின் கை சேதமே!“ என்று கூறுவதால் என்னைப் புண்படுத்துகின்றான். ஆகவே, உங்களில் ஒருவர் “காலத்தின் கைசேதமே!“ என்று கூற வேண்டாம். ஏனெனில், நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கின்றேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (பூமியைச் சுழல விடாமல்) நிறுத்திவிடுவேன்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment