அத்தியாயம்: 43, பாடம்: 22, ஹதீஸ் எண்: 4289

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ عَنْ أُمِّ سُلَيْمٍ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَأْتِيهَا فَيَقِيلُ عِنْدَهَا فَتَبْسُطُ لَهُ نَطْعًا فَيَقِيلُ عَلَيْهِ وَكَانَ كَثِيرَ الْعَرَقِ فَكَانَتْ تَجْمَعُ عَرَقَهُ فَتَجْعَلُهُ فِي الطِّيبِ وَالْقَوَارِيرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ يَا أُمَّ سُلَيْمٍ مَا هَذَا ‏”‏ ‏‏ قَالَتْ عَرَقُكَ أَدُوفُ بِهِ طِيبِي ‏

நபி (ஸல்) எங்கள் வீட்டுக்கு மதிய ஓய்வெடுப்பதற்காக வருவார்கள். அப்போது அவர்களுக்காக நான் தோல் விரிப்பு ஒன்றை விரிப்பேன். அந்த விரிப்பில் நபி (ஸல்) மதிய ஓய்வெடுப்பார்கள். நபி (ஸல்) அவர்களது உடலில் அதிகமாக வியர்வை ஏற்படும். அப்போது நான் அவர்களது வியர்வைத் துளிகளை எடுத்து வாசனைப் பொருட்களிலும் கண்ணாடிக் குடுவைகளிலும் சேகரிப்பது வழக்கம். அப்படியான ஒருபோது நபி (ஸல்), “உம்முஸுலைமே! என்ன இது?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “உங்களது வியர்வைத் துளிகளை எனது நறுமணப் பொருளில் சேர்க்கின்றேன்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : உம்முஸுலைம் (ரலி)