அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4305

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكَّارِ بْنِ الرَّيَّانِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّاءَ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، عَنِ ابْنِ سِيرِينَ قَالَ :‏

سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَضَبَ فَقَالَ لَمْ يَبْلُغِ الْخِضَابَ كَانَ فِي لِحْيَتِهِ شَعَرَاتٌ بِيضٌ ‏.‏ قَالَ قُلْتُ لَهُ أَكَانَ أَبُو بَكْرٍ يَخْضِبُ قَالَ فَقَالَ نَعَمْ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தலைமுடிக்குச்) சாயம் பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “சாயம் பூசுகின்ற அளவுக்கு அவர்களுக்கு (நரை முடிகள்) இல்லை. அவர்களது தாடியில் மட்டுமே சில வெள்ளை முடிகள் இருந்தன” என்று கூறினார்கள்.

அவர்களிடம், “அபூபக்ரு (ரலி) சாயம் பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு, “ஆம்; மருதாணி இலையாலும் (யமன் நாட்டு மூலிகை) கத்தம் செடியின் இலையாலும் (சாயம் பூசியிருந்தார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment