அத்தியாயம்: 43, பாடம்: 29, ஹதீஸ் எண்: 4310

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو خَيْثَمَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي جُحَيْفَةَ قَالَ :‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ مِنْهُ بَيْضَاءَ وَوَضَعَ زُهَيْرٌ بَعْضَ أَصَابِعِهِ عَلَى عَنْفَقَتِهِ قِيلَ لَهُ مِثْلُ مَنْ أَنْتَ يَوْمَئِذٍ قَالَ أَبْرِي النَّبْلَ وَأَرِيشُهَا

அபூஜுஹைஃபா (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (முகத்தில்) இந்த இடத்தில் வெள்ளை முடி இருந்ததை நான் கண்டிருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

(அபூஜுஹைஃபா (ரலி) சுட்டிக்காட்டியதைப் போன்று, இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) தமது விரல் ஒன்றைத் தமது கீழுதட்டிலுள்ள குறுந்தாடியின் மீது வைத்து சைகை செய்து காட்டினார்கள்).

அப்போது அவர்களிடம், “அன்றைய தினம் நீங்கள் (வயதில்) யாரை ஒத்து இருந்தீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஜுஹைஃபா (ரலி), “அப்போது நான் அம்புக்கு இறகு பொருத்தும் விவரமுடைய வயதுள்ளவனாக இருந்தேன்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஜுஹைஃபா (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment