அத்தியாயம்: 43, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4320

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو قَالَ قُلْتُ لِعُرْوَةَ :‏

كَمْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَكَّةَ قَالَ عَشْرًا ‏.‏ قَالَ قُلْتُ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ ثَلاَثَ عَشْرَةَ ‏


وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو قَالَ قُلْتُ لِعُرْوَةَ كَمْ لَبِثَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَكَّةَ قَالَ عَشْرًا ‏.‏ قُلْتُ فَإِنَّ ابْنَ عَبَّاسٍ يَقُولُ بِضْعَ عَشْرَةَ ‏.‏ قَالَ فَغَفَّرَهُ وَقَالَ إِنَّمَا أَخَذَهُ مِنْ قَوْلِ الشَّاعِرِ ‏

நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) (நபியாக்கப்பட்ட பின்னர்) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “பத்து ஆண்டுகள்” என்று பதிலளித்தார்கள். நான், “ஆனால், பதின்மூன்று ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்” என்று சொன்னேன்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அம்ரு பின் தீனார் (ரஹ்)


குறிப்பு :

ஸுஃப்யான் வழி அறிவிப்பில், நான் உர்வா (ரஹ்) அவர்களிடம், “நபி (ஸல்) (நபியாக்கப்பட்ட பின்பு) மக்காவில் எத்தனை ஆண்டுகள் தங்கியிருந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பத்து ஆண்டுகள்’ என்று பதிலளித்தார்கள். “ஆனால், பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தங்கியிருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்களே?” என்று நான் கேட்டேன்.

அப்போது உர்வா (ரஹ்), “அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக!” என்று பாவ மன்னிப்பு வேண்டிப் பிரார்த்தித்துவிட்டு, “இப்னு அப்பாஸ், அந்த (அபூகைஸ் என்ற) கவிஞரின் வரிகளிலிருந்தே அதை எடுத்துரைக்கின்றார்” என்று சொன்னார்கள் என்று காணப்படுகின்றது.

Share this Hadith:

Leave a Comment