அத்தியாயம்: 43, பாடம்: 34, ஹதீஸ் எண்: 4330

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَمِّي لَنَا نَفْسَهُ أَسْمَاءً فَقَالَ ‏ “‏ أَنَا مُحَمَّدٌ وَأَحْمَدُ وَالْمُقَفِّي وَالْحَاشِرُ وَنَبِيُّ التَّوْبَةِ وَنَبِيُّ الرَّحْمَةِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமக்குப் பல பெயர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். “நான் ‘முஹம்மது’ (புகழப்பட்டவன்), ‘அஹ்மது’ (இறைவனை அதிகமாகப் புகழ்பவன்), ‘முகஃப்பீ’ (இறுதியானவன்), ‘ஹாஷிர்’ (ஒன்றுதிரட்டுபவன்), ‘நபிய்யுத் தவ்பா’ (மக்களுக்குப் பாவமன்னிப்புக் கோரும் தூதன்), ‘நபிய்யுர் ரஹ்மத்’ (இரக்கத்தைப் போதிக்க வந்த தூதன்) ஆவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment