அத்தியாயம்: 43, பாடம்: 38, ஹதீஸ் எண்: 4343

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ الْيَمَامِيُّ، وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، وَأَحْمَدُ بْنُ جَعْفَرٍ الْمَعْقِرِيُّ قَالُوا حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، – وَهُوَ ابْنُ عَمَّارٍ – حَدَّثَنَا أَبُو النَّجَاشِيِّ، حَدَّثَنِي رَافِعُ بْنُ خَدِيجٍ قَالَ :‏

قَدِمَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يَأْبُرُونَ النَّخْلَ يَقُولُونَ يُلَقِّحُونَ النَّخْلَ فَقَالَ ‏”‏ مَا تَصْنَعُونَ ؟‏”‏ ‏.‏ قَالُوا كُنَّا نَصْنَعُهُ قَالَ ‏”‏ لَعَلَّكُمْ لَوْ لَمْ تَفْعَلُوا كَانَ خَيْرًا ‏”‏ ‏.‏ فَتَرَكُوهُ فَنَفَضَتْ أَوْ فَنَقَصَتْ – قَالَ – فَذَكَرُوا ذَلِكَ لَهُ فَقَالَ ‏”‏ إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ رَأْىٍ فَإِنَّمَا أَنَا بَشَرٌ ‏”‏ 


قَالَ عِكْرِمَةُ أَوْ نَحْوَ هَذَا ‏.‏ قَالَ الْمَعْقِرِيُّ فَنَفَضَتْ ‏.‏ وَلَمْ يَشُكَّ ‏

நபி (ஸல்) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவாசிகள் பேரீச்ச மரங்களை மகரந்தச் சேர்க்கை செய்துகொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்ச மரங்களை, சூல் கொள்ள (அவ்வாறு) செய்வதாக அவர்கள் கூறினர்.

நபி (ஸல்), “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள் “இவ்வாறுதான் (வழக்கமாக) நாங்கள் செய்துவருகின்றோம்” என்று கூறினர். நபி (ஸல்), “நீங்கள் இவ்வாறு செய்யாதிருந்தால் நன்றாயிருக்கக் கூடும்” என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டுவிட்டனர். அந்த வருடத்தில் கனிகள் (வெம்பி) உதிர்ந்துவிட்டன அல்லது குறைந்துவிட்டன.

அதைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், “நானும் மனிதன் தான்; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் மனிதனே” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்புகள் :

“இவ்வாறோ இதைப் போன்றோ சொன்னார்கள்” என அறிவிப்பாளர் இக்ரிமா (ரஹ்) அறிவித்தார்.

அஹ்மது பின் ஜஅஃபர் அல்மஅகரீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… ஆகவே, கனிகள் (அந்த ஆண்டில் வெம்பி) உதிர்ந்துவிட்டன” என்று ஐயப்பாடின்றி உறுதியாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment