அத்தியாயம்: 44, பாடம்: 10, ஹதீஸ் எண்: 4436

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُمَرَ، – يَعْنِي ابْنَ حَمْزَةَ – عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ ‏ “‏ إِنْ تَطْعَنُوا فِي إِمَارَتِهِ – يُرِيدُ أُسَامَةَ بْنَ زَيْدٍ – فَقَدْ طَعَنْتُمْ فِي إِمَارَةِ أَبِيهِ مِنْ قَبْلِهِ وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لَخَلِيقًا لَهَا ‏.‏ وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لأَحَبَّ النَّاسِ إِلَىَّ ‏.‏ وَايْمُ اللَّهِ إِنَّ هَذَا لَهَا لَخَلِيقٌ – يُرِيدُ أُسَامَةَ بْنَ زَيْدٍ – وَايْمُ اللَّهِ إِنْ كَانَ لأَحَبَّهُمْ إِلَىَّ مِنْ بَعْدِهِ فَأُوصِيكُمْ بِهِ فَإِنَّهُ مِنْ صَالِحِيكُمْ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொற்பொழிவு மேடை மீது இருந்தபடி, “இவரது தலைமையை (இப்போது) குறை கூறுகின்றீர்கள் என்றால், இவருக்குமுன் இவருடைய தந்தை (ஸைத்) அவர்களின் தலைமையையும் நீங்கள் குறை கூறுபவர்களாக இருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் தலைமைக்குத் தகுதியானவராகவே இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! (அவருடைய மகனான) இவரும் தலைமைக்குத் தகுதியானவரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்குப்பின் இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். இவரைப் பற்றி உங்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகின்றேன். ஏனெனில், இவர் உங்களில் தகுதியானவர்களுள் ஒருவராவார்” என்று உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைக் குறித்துக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)