அத்தியாயம்: 44, பாடம்: 12, ஹதீஸ் எண்: 4450

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتِ :‏ ‏

اسْتَأْذَنَتْ هَالَةُ بِنْتُ خُوَيْلِدٍ أُخْتُ خَدِيجَةَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَعَرَفَ اسْتِئْذَانَ خَدِيجَةَ فَارْتَاحَ لِذَلِكَ فَقَالَ ‏ “‏ اللَّهُمَّ هَالَةُ بِنْتُ خُوَيْلِدٍ ‏”‏ ‏.‏ فَغِرْتُ فَقُلْتُ وَمَا تَذْكُرُ مِنْ عَجُوزٍ مِنْ عَجَائِزِ قُرَيْشٍ حَمْرَاءِ الشِّدْقَيْنِ هَلَكَتْ فِي الدَّهْرِ فَأَبْدَلَكَ اللَّهُ خَيْرًا مِنْهَا

கதீஜா (ரலி) அவர்களின் (இறப்புக்குப்பின் அவருடைய) சகோதரி ஹாலா பின்த்தி குவைலித் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே) வர அனுமதி கோரினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), கதீஜா (ரலி) குரலையும் அனுமதி கேட்கும் முறையையும் நினைவு கூர்ந்து (உணர்ச்சிவசப்பட்டு), “இறைவா! இவர் ஹாலா பின்த்தி குவைலித்!” என்று மகிழ்ந்து கூறினார்கள்.

உடனே நான் சீற்றம் கொண்டு, “தாடைகள் சிவந்து, எப்போதோ இறந்துவிட்ட குறைஷிக் கிழவியருள் ஒருவரை ஏன் (எப்போதும்) நினைவுகூர்கின்றீர்கள்? அவருக்குப் பதிலாக (பருவத்தாலும் அழகாலும்) அவரைவிடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கின்றானே!” என்று கேட்டுவிட்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith: