அத்தியாயம்: 44, பாடம்: 18, ஹதீஸ் எண்: 4474

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ قَالَ:‏

انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أُمِّ أَيْمَنَ فَانْطَلَقْتُ مَعَهُ فَنَاوَلَتْهُ إِنَاءً فِيهِ شَرَابٌ – قَالَ – فَلاَ أَدْرِي أَصَادَفَتْهُ صَائِمًا أَوْ لَمْ يُرِدْهُ فَجَعَلَتْ تَصْخَبُ عَلَيْهِ وَتَذَمَّرُ عَلَيْهِ ‏‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றபோது அவர்களுடன் நானும் சென்றேன்.

உம்மு அய்மன் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் குடிபானம் இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோன்பாளியாக இருந்தார்களோ, அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ எனக்குத் தெரியாது. (அதை அவர்கள் பருக மறுத்துவிட்டார்கள்).

அதற்காக உம்மு அய்மன் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உரத்த குரலில் கோபமாகக் கடிந்துகொண்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith: