حَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَنَسٍ قَالَ :
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَدْخُلُ عَلَى أَحَدٍ مِنَ النِّسَاءِ إِلاَّ عَلَى أَزْوَاجِهِ إِلاَّ أُمِّ سُلَيْمٍ فَإِنَّهُ كَانَ يَدْخُلُ عَلَيْهَا فَقِيلَ لَهُ فِي ذَلِكَ فَقَالَ “ إِنِّي أَرْحَمُهَا قُتِلَ أَخُوهَا مَعِي ”
உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் இல்லத்தைத் தவிர நபி (ஸல்) தம் மனைவியரல்லாத வேறெந்த (அந்நியப்) பெண்களின் இல்லங்களுக்கும் செல்லமாட்டார்கள். என் தாயார் உம்மு ஸுலைம் (ரலி) இல்லத்திற்கு மட்டுமே செல்வார்கள்.
நபியவர்களிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது, “நான் உம்மு ஸுலைமிடம் பரிவு காட்டுகிறேன். அவருடைய சகோதரர் (ஹராம் பின் மில்ஹான் – ரலி) என்னு(டைய பிரசாரப் படையினரு)டன் இருந்தபோது, (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொல்லப்பட்டார்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)