حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأُبَىٍّ ” إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ” . قَالَ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ ” اللَّهُ سَمَّاكَ لِي ” . قَالَ فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களுக்கு (குர்ஆனின் 98ஆவது அத்தியாயத்தை) ஓதிக்காட்டும்படி எனக்குக் கட்டளையிட்டான்” என்று சொன்னார்கள்.
அதற்கு உபை பின் கஅப் (ரலி), “அல்லாஹ், என் பெயரை உங்களிடம் குறிப்பிட்டானா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(ஆம்;) அல்லாஹ்தான் உங்கள் பெயரை என்னிடம் குறிப்பிட்டான்” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) (மகிழ்ச்சியால்) அழத் தொடங்கினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)