அத்தியாயம்: 44, பாடம்: 30, ஹதீஸ் எண்: 4509

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَأَبُو بَكْرِ بْنُ النَّضْرِ قَالاَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا وَرْقَاءُ بْنُ عُمَرَ الْيَشْكُرِيُّ، قَالَ سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ بْنَ أَبِي يَزِيدَ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَتَى الْخَلاَءَ فَوَضَعْتُ لَهُ وَضُوءًا فَلَمَّا خَرَجَ قَالَ ‏”‏ مَنْ وَضَعَ هَذَا ‏”‏ ‏.‏ فِي رِوَايَةِ زُهَيْرٍ قَالُوا ‏.‏ وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ قُلْتُ ابْنُ عَبَّاسٍ ‏.‏ قَالَ ‏”‏ اللَّهُمَّ فَقِّهْهُ ‏”‏ ‏

நபி (ஸல்) (ஒரு முறை) கழிப்பிடத்திற்குச் சென்றார்கள். நான் அவர்களுக்காக நீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள். மக்கள், “இப்னு அப்பாஸ்“ என்று கூறினர். நபி (ஸல்), “இறைவா! அவருக்கு மார்க்கத்தில் (நல்ல) விளக்கத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்)


குறிப்பு :

அபூபக்ரு பின் அந்நள்ரு (ரஹ்) வழி அறிவிப்பில், (மக்கள் என்பதற்குப் பதிலாக) “நான், இப்னு அப்பாஸ் (வைத்தேன்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: