حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ، – وَاللَّفْظُ لإِسْحَاقَ – قَالاَ أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :
فِينَا نَزَلَتْ { إِذْ هَمَّتْ طَائِفَتَانِ مِنْكُمْ أَنْ تَفْشَلاَ وَاللَّهُ وَلِيُّهُمَا} بَنُو سَلِمَةَ وَبَنُو حَارِثَةَ وَمَا نُحِبُّ أَنَّهَا لَمْ تَنْزِلْ لِقَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ { وَاللَّهُ وَلِيُّهُمَا}
“அப்போது உங்களில் இரு குழுவினர் துணிவிழந்து (திரும்பிவிட எண்ணி) நின்றனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன்” எனும் (3:122) இறைவசனம், பனூ ஸலிமா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே அருளப்பெற்றது. ‘இந்த வசனம் அருளப்பெறாமல் இருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்றெல்லாம் (கூற) நாங்கள் விரும்பமாட்டோம். ஏனெனில், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன்” என்று (எங்களை மேன்மைப்படுத்தியன்றோ) கூறுகின்றான்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)