அத்தியாயம்: 44, பாடம்: 49, ஹதீஸ் எண்: 4573

حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ نِسَاءُ قُرَيْشٍ خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الإِبِلَ أَحْنَاهُ عَلَى طِفْلٍ وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ ‏”‏ ‏.‏ قَالَ يَقُولُ أَبُو هُرَيْرَةَ عَلَى إِثْرِ ذَلِكَ وَلَمْ تَرْكَبْ مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ بَعِيرًا قَطُّ ‏


حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي قَدْ كَبِرْتُ وَلِيَ عِيَالٌ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ ‏”‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ يُونُسَ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ ‏”‏

“குறைஷிப் பெண்கள்தாம் ஒட்டகத்தில் பயணித்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள். (தம்) குழந்தைகள் மீது அதிகப் பரிவுடையவர்கள். தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிப் பாதுகாக்கக்கூடியவர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) மேற்கண்டவாறு அறிவித்துவிட்டுத் தொடர்ந்து, “இம்ரானின் மகள் மர்யம் (அலை) ஒட்டகம் எதிலும் பயணித்ததேயில்லை” என்று கூறினார்கள்.

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) உம்முஹானீ பின்த்தி அபீதாலிப் (ரலி)’ அவர்களைத் தமக்காகப் பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஹானீ அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வயதாகிவிட்டது; எனக்கென்று (பெரிய) குடும்பம் உள்ளது” என்று கூறி (மறுத்து)விட்டார்கள். அப்போதுதான் நபி (ஸல்), (மேற்கண்டவாறு) “ஒட்டகத்தில் பயணித்த பெண்களிலேயே சிறந்தவர்கள்…” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

மேலும், “(தம்) குழந்தைகள் மீது அதிகப் பாசமுடையவர்கள்” எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: