அத்தியாயம்: 44, பாடம்: 50, ஹதீஸ் எண்: 4576

حَدَّثَنِي أَبُو جَعْفَرٍمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا عَاصِمٌ الأَحْوَلُ، قَالَ :‏

قِيلَ لأَنَسِ بْنِ مَالِكٍ بَلَغَكَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ ‏”‏ ‏.‏ فَقَالَ أَنَسٌ قَدْ حَالَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِي دَارِهِ

“இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக் கொள்கிற ஒருவருக்கொருவர் வாரிசாகிக் கொள்ளும்) சகோதர உறவு முறை இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  கூறினார்கள் என்பதாக உங்களுக்குச் செய்தி கிடைத்ததா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அனஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனது வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்ஸாரிகளுக்கும் இடையே சகோதர உறவு முறையை ஏற்படுத்தியிருந்தார்களே!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக ஆஸிம் பின் ஸுலைமான் அல்அஹ்வல் (ரஹ்)

Share this Hadith: