அத்தியாயம்: 44, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4426

حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، – وَهُوَ ابْنُ سَلَمَةَ – عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏ ‏

أَنَّ أَهْلَ الْيَمَنِ، قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا ابْعَثْ مَعَنَا رَجُلاً يُعَلِّمْنَا السُّنَّةَ وَالإِسْلاَمَ ‏.‏ قَالَ فَأَخَذَ بِيَدِ أَبِي عُبَيْدَةَ فَقَالَ ‏ “‏ هَذَا أَمِينُ هَذِهِ الأُمَّةِ ‏”‏

யமன் வாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களுக்கு இஸ்லாத்தையும் நபிவழியையும் கற்றுக்கொடுப்பதற்காக எங்களுடன் ஒருவரை அனுப்பிவையுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூஉபைதா (ரலி) அவர்களின் கையைப் பிடித்து, “இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் ஆவார். (இவரை அழைத்துச் செல்லுங்கள்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment