அத்தியாயம்: 45, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4602

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدِ بْنِ جَمِيلِ بْنِ طَرِيفٍ الثَّقَفِيُّ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالاَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي قَالَ ‏”‏ أُمُّكَ ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏”‏ ثُمَّ أُمُّكَ ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏”‏ ثُمَّ أُمُّكَ ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ مَنْ قَالَ ‏”‏ ثُمَّ أَبُوكَ ‏”‏ 


وَفِي حَدِيثِ قُتَيْبَةَ مَنْ أَحَقُّ بِحُسْنِ صَحَابَتِي وَلَمْ يَذْكُرِ النَّاسَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் அழகிய தோழமை கொள்வதற்கு மனிதர்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தாய்” என்றார்கள். அவர், “பிறகு யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தாய்” என்றார்கள். அவர் (நான்காவது முறை யாக), “பிறகு யார்?” என்று கேட்டதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உன் தந்தை” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

குதைபா பின் ஸயீத் (ரஹ்) அறிவிப்பில், “மனிதர்களில் (மிகவும் தகுதியானவர் யார்?) எனும் குறிப்பு இடம்பெறவில்லை. நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?” என்றே இடம்பெற்றுள்ளது.

 

Share this Hadith: