அத்தியாயம்: 45, பாடம்: 36, ஹதீஸ் எண்: 4724

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَرَّ رَجُلٌ بِغُصْنِ شَجَرَةٍ عَلَى ظَهْرِ طَرِيقٍ فَقَالَ وَاللَّهِ لأُنَحِّيَنَّ هَذَا عَنِ الْمُسْلِمِينَ لاَ يُؤْذِيهِمْ ‏.‏ فَأُدْخِلَ الْجَنَّةَ ‏”‏

“ஒருவர், நடைபாதையில் கிடந்த மரக் கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம்(பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்‘ என்று கூறி(விட்டு அதை அப்புறப்படுத்தி)னார். அதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: