அத்தியாயம்: 45, பாடம்: 47, ஹதீஸ் எண்: 4749

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى، – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالاَ حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي السَّلِيلِ، عَنْ أَبِي حَسَّانَ قَالَ :‏

قُلْتُ لأَبِي هُرَيْرَةَ إِنَّهُ قَدْ مَاتَ لِيَ ابْنَانِ فَمَا أَنْتَ مُحَدِّثِي عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِحَدِيثٍ تُطَيِّبُ بِهِ أَنْفُسَنَا عَنْ مَوْتَانَا قَالَ قَالَ نَعَمْ ‏ “‏ صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ يَتَلَقَّى أَحَدُهُمْ أَبَاهُ – أَوْ قَالَ أَبَوَيْهِ – فَيَأْخُذُ بِثَوْبِهِ – أَوْ قَالَ بِيَدِهِ – كَمَا آخُذُ أَنَا بِصَنِفَةِ ثَوْبِكَ هَذَا فَلاَ يَتَنَاهَى – أَوْ قَالَ فَلاَ يَنْتَهِي – حَتَّى يُدْخِلَهُ اللَّهُ وَأَبَاهُ الْجَنَّةَ ‏”‏


وَفِي رِوَايَةِ سُوَيْدٍ قَالَ حَدَّثَنَا أَبُو السَّلِيلِ وَحَدَّثَنِيهِ عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَحْيَى – يَعْنِي ابْنَ سَعِيدٍ – عَنِ التَّيْمِيِّ بِهَذَا الإِسْنَادِ وَقَالَ فَهَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَيْئًا تُطَيِّبُ بِهِ أَنْفُسَنَا عَنْ مَوْتَانَا قَالَ نَعَمْ ‏.‏

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “என்னுடைய ஆண் குழந்தைகள் இருவர் இறந்துவிட்டனர். நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்ன ஹதீஸ் ஒன்றை எனக்கு நீங்கள் அறிவியுங்களேன்” என்று கேட்டேன்.

அபூஹுரைரா (ரலி) “அறிவிக்கிறேன்!” என்று கூறிவிட்டு, “குழந்தைகள், சொர்க்கத்தின் நுண்ணுயிர்கள் ஆவர். அக்குழந்தைகளில் ஒன்று தன் தந்தையை, அல்லது பெற்றோரைச் சந்திக்கும்போது -நான் உங்களுடைய இந்த ஆடையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பதைப் போன்று- அவரது ஆடையை, அல்லது அவரது கையைப் பிடித்துக்கொள்ளும். பிறகு தன்னையும் தன் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்திற்குள் நுழைவிக்கும்வரை விடாது; அல்லது விலகாது” என்று (நபியவர்கள்) சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஹஸ்ஸான் (ரஹ்)


குறிப்பு :

ஸுவைத் பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாங்கள் இழந்துவிடும் குழந்தைகள் தொடர்பாக எங்கள் உள்ளங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஏதேனும் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) “ஆம் என்றார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: