حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، – وَاللَّفْظُ لإِسْحَاقَ – قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ :
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ “ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَى أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ فَزِنَى الْعَيْنَيْنِ النَّظَرُ وَزِنَى اللِّسَانِ النُّطْقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ أَوْ يُكَذِّبُهُ ”
قَالَ عَبْدٌ فِي رِوَايَتِهِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ
“விபச்சாரத்தில் ஆதமின் மக(ன் மனித)னுக்குள்ள பங்கை இறைவன் விதித்துள்ளான். அதைத் தவிர்க்க இயலாமல் (ஏதோவொரு வகையில்) மனிதன் அடைந்தே தீருவான். (மனிதனின் கண்களும் நாவும் விபச்சாரம் செய்கின்றன. எவ்வாறெனில்,) கண்களின் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவின் விபச்சாரம் (ஆபாசமான) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. இன உறுப்பு (ஈடுபட்டு) உண்மையாக்குகின்றது; அல்லது (ஈடுபடாமல் விலகி,) பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
“நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ள இந்த ஹதீஸைவிடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை” என்று இதன் அறிவிப்பாளரார்களுள் ஒருவரான இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.