அத்தியாயம்: 48, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4813

حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ، حَدَّثَنَا يَزِيدُ، – يَعْنِي ابْنَ زُرَيْعٍ – حَدَّثَنَا رَوْحُ بْنُ الْقَاسِمِ عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسِيرُ فِي طَرِيقِ مَكَّةَ فَمَرَّ عَلَى جَبَلٍ يُقَالُ لَهُ جُمْدَانُ فَقَالَ ‏”‏ سِيرُوا هَذَا جُمْدَانُ سَبَقَ الْمُفَرِّدُونَ ‏”‏ ‏.‏ قَالُوا وَمَا الْمُفَرِّدُونَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ الذَّاكِرُونَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتُ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்டபோது ‘ஜும்தான்’ எனப்படும் மலையைக் கடந்து சென்றார்கள். அப்போது, “செல்லுங்கள், இது ‘ஜும்தான்’ மலை ஆகும். தனித்து(வத்துடன் சென்று) விட்டவர்கள் வெற்றி பெற்றனர்” என்று சொன்னார்கள்.

மக்கள், “தனித்து(வத்துடன் சென்று) விட்டவர்கள் என்போர் யாவர், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: