அத்தியாயம்: 49, பாடம்: 1, ஹதீஸ் எண்: 4898

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ كَانَ لِمُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ امْرَأَتَانِ فَجَاءَ مِنْ عِنْدِ إِحْدَاهُمَا فَقَالَتِ الأُخْرَى جِئْتَ مِنْ عِنْدِ فُلاَنَةَ فَقَالَ جِئْتُ مِنْ عِنْدِ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ فَحَدَّثَنَا :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِنَّ أَقَلَّ سَاكِنِي الْجَنَّةِ النِّسَاءُ ‏”‏ ‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْحَمِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ سَمِعْتُ مُطَرِّفًا، يُحَدِّثُ أَنَّهُ كَانَتْ لَهُ امْرَأَتَانِ بِمَعْنَى حَدِيثِ مُعَاذٍ ‏

முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு இரு மனைவியர் இருந்தனர். அவர் (ஒரு முறை) அவ்விருவரில் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் வந்தபோது, “இன்னவளிடமிருந்து வருகின்றீர்களா?” என்று அந்த மனைவி கேட்டார்.

அதற்கு முதர்ரிஃப் (ரஹ்), “நான் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்து வருகின்றேன். இம்ரான் (ரலி), ‘சொர்க்கத்தில் வசிப்போரில் மிகவும் குறைவானவர்கள் பெண்களே’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என எங்களுக்கு அறிவித்தார்கள்” என்றார்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக அபுத்தய்யாஹ் யஸீத் பின் ஹுமைத் (ரஹ்)


குறிப்பு :

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பு, “எனக்கு இரு மனைவியர் இருந்தனர்…” என்று முதர்ரிஃப் (ரஹ்) கூறியதாக ஆரம்பமாகி, மேற்கண்ட  தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Share this Hadith: