அத்தியாயம்: 5, பாடம்: 16, ஹதீஸ் எண்: 864

حَدَّثَنَا ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

قَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي ‏ ‏خَمِيصَةٍ ‏ ‏ذَاتِ أَعْلَامٍ فَنَظَرَ إِلَى عَلَمِهَا فَلَمَّا قَضَى صَلَاتَهُ قَالَ ‏ ‏اذْهَبُوا بِهَذِهِ ‏ ‏الْخَمِيصَةِ ‏ ‏إِلَى ‏ ‏أَبِي جَهْمِ بْنِ حُذَيْفَةَ ‏ ‏وَأْتُونِي ‏ ‏بِأَنْبِجَانِيِّهِ ‏ ‏فَإِنَّهَا أَلْهَتْنِي ‏ ‏آنِفًا ‏ ‏فِي صَلَاتِي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு நின்று தொழுதார்கள். அதன் வேலைப்பாட்டை உற்று நோக்கினார்கள். தொழுது முடித்ததும், “இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூஜஹ்ம் பின் ஹுதைஃபாவிடம் (இதைக்) கொண்டு செல்லுங்கள். (அவரிடமிருந்து) சாராரண ஆடையை(ப் பெற்று) என்னிடம் கொண்டு வாருங்கள். ஏனெனில் சற்று முன்பு இது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பிவிட்டது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment