அத்தியாயம்: 5, பாடம்: 38, ஹதீஸ் எண்: 1004

و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَارَةَ بْنِ رُؤَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏:‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا ‏ ‏يَلِجُ ‏ ‏النَّارَ مَنْ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏


وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ ‏ ‏الْبَصْرَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ نَعَمْ أَشْهَدُ بِهِ عَلَيْهِ قَالَ وَأَنَا أَشْهَدُ لَقَدْ سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُهُ بِالْمَكَانِ الَّذِي سَمِعْتَهُ مِنْهُ

“சூரியன் உதிப்பதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் (ஃபஜ்ரையும் அஸ்ரையும் வேளை தவறாது) தொழுபவர், நரக நெருப்பில் நுழையமாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அறிவித்தார்கள். அப்போது உமாரா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த பஸ்ராவாசிகளில் ஒருவர், “இதை நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?'”என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி), “ஆம், நபி (ஸல்) அவ்வாறு கூறினார்கள் என நான் உறுதி அளிக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த பஸ்ராவாசி, “நபி (ஸல்) இவ்வாறு கூறியதை நீங்கள் செவியேற்ற அதே இடத்தில் நானும் செவியுற்றிருக்கின்றேன் என நானும் உறுதி அளிக்கின்றேன்” என்றார்.

அறிவிப்பாளர் : உமாரா பின் ருஐபா (ரலி) வழியாக அவரின் மகன் அபூபக்ரிப்னு உமாரா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment