அத்தியாயம்: 5, பாடம்: 06, ஹதீஸ் எண்: 834

حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّبَيْرِ بْنِ عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ‏ ‏قَالَ

صَلَّيْتُ إِلَى جَنْبِ ‏ ‏أَبِي ‏ ‏فَلَمَّا رَكَعْتُ شَبَّكْتُ أَصَابِعِي وَجَعَلْتُهُمَا بَيْنَ رُكْبَتَيَّ فَضَرَبَ يَدَيَّ فَلَمَّا صَلَّى قَالَ قَدْ ‏ ‏كُنَّا نَفْعَلُ هَذَا ثُمَّ أُمِرْنَا أَنْ نَرْفَعَ إِلَى الرُّكَبِ

நான் என் தந்தையின் விலாப் புறத்தில் தொழுதேன். நான் ருகூஉச் செய்த போது என் இரு கைவிரல்களைக் கோத்து என் முழங்கால்களுக்கிடையே வைத்துக் கொண்டேன். அவர்கள் என் கைகள் மீது அடித்தார்கள். தொழுது முடித்ததும் “நாங்களும் (முன்னர்) இவ்வாறுதான் செய்து கொண்டிருந்தோம்; பின்னர் முழங்கால்களுக்கு (இடையில் வைத்த) கைகளை ஏற்றி, (முழங்கால்களின் மீது) வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) வழியாக அவரின் மகன் முஸ்அபு (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment