حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَبَّادِ بْنِ جَبَلَةَ بْنِ أَبِي رَوَّادٍ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، حَدَّثَنَا شَدَّادٌ أَبُو طَلْحَةَ الرَّاسِبِيُّ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ :
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ يَجِيءُ يَوْمَ الْقِيَامَةِ نَاسٌ مِنَ الْمُسْلِمِينَ بِذُنُوبٍ أَمْثَالِ الْجِبَالِ فَيَغْفِرُهَا اللَّهُ لَهُمْ وَيَضَعُهَا عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى ” . فِيمَا أَحْسِبُ أَنَا . قَالَ أَبُو رَوْحٍ لاَ أَدْرِي مِمَّنِ الشَّكُّ . قَالَ أَبُو بُرْدَةَ فَحَدَّثْتُ بِهِ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ فَقَالَ أَبُوكَ حَدَّثَكَ هَذَا عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْتُ نَعَمْ
“மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர், மலைகளளவு பாவங்களுடன் வருவார்கள். ஆனால், அவற்றை அவர்களுக்கு அல்லாஹ் மன்னித்துவிட்டு, யூதர்கள் மீதும் கிறித்தவர்கள் மீதும் அவற்றை வைத்துவிடுவான்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி) வழியாக அன்னாரின் மகனார் அபூபுர்தா (ரஹ்)
குறிப்புகள் :
“நபி (ஸல்) அவ்வாறு நாகூறியதாகவே நான் கருதுகின்றேன்” என்று அபூபுர்தா (ரஹ்) கூறுகின்றார்.
அபூமூஸா (ரலி) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற அபூபுர்தா (ரஹ்) கூறுகின்றார்கள்: “இந்த ஹதீஸை நான் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், ‘இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்தா உம்முடைய தந்தை அறிவித்தார்?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘ஆம்’ என்றேன்”.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூரவ்ஹு ஹரமீ பின் உமாரா (ரஹ்), “அவ்வாறே நான் கருதுகின்றேன் எனும் ஐயப்பாட்டைத் தெரிவித்த அறிவிப்பாளர் யார் என்பது எனக்குத் தெரியாது” என்று கூறுகின்றார்.