அத்தியாயம்: 52, பாடம்: 17, ஹதீஸ் எண்: 5011

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ بُكَيْرٍ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏”‏ لَنْ يُنْجِيَ أَحَدًا مِنْكُمْ عَمَلُهُ ‏”‏ ‏.‏ قَالَ رَجُلٌ وَلاَ إِيَّاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ وَلاَ إِيَّاىَ إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِيَ اللَّهُ مِنْهُ بِرَحْمَةٍ وَلَكِنْ سَدِّدُوا ‏”‏ ‏


وَحَدَّثَنِيهِ يُونُسُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّدَفِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏”‏ بِرَحْمَةٍ مِنْهُ وَفَضْلٍ ‏”‏ ‏.‏ وَلَمْ يَذْكُرْ ‏”‏ وَلَكِنْ سَدِّدُوا ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்களில் யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றாது (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெருங்கருணையே காப்பாற்றும்)” என்று சொன்னார்கள். ஒருவர், “தங்களையுமா காப்பாற்றாது, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என்னையும்தான் காப்பாற்றாது; அல்லாஹ் (தன்) பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர” என்று கூறிவிட்டு, “எனவே (வழிபாடுகள், நல்லறங்களில்) நடுநிலையோடு செயல்படுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அம்ரிப்னு காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் பேரருளாலும் தனிக் கருணையாலும் (அரவணைத்துக் கொண்டால்) தவிர” என்று காணப்படுகிறது. அதில், “எனவே, நடுநிலையோடு செயல்படுங்கள்” எனும் குறிப்பு இல்லை.

Share this Hadith: