அத்தியாயம்: 55, பாடம்: 3, ஹதீஸ் எண்: 5268

حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، وَأَحْمَدُ بْنُ عِيسَى، قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، – وَهُوَ ابْنُ الْحَارِثِ – أَنَّ بُكَيْرًا، حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللَّهِ الْخَوْلاَنِيَّ، يَذْكُرُ أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ :‏

عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّكُمْ قَدْ أَكْثَرْتُمْ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ مَنْ بَنَى مَسْجِدًا – قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ – يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ ‏”‏ ‏‏


وَفِي رِوَايَةِ هَارُونَ ‏”‏ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ‏”‏

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை(விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது, அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது உஸ்மான் (ரலி) மக்களிடம், “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ’யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகின்றாரோ –(புகைர் (ரஹ்) அறிவிப்பில் ’அல்லாஹ்வின் உவப்பை நாடி பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகின்றாரோ’ என்று ஆஸிம் பின் உமர் (ரஹ்) அறிவித்தார்கள் என நான் எண்ணுகிறேன் என்று) இடம்பெற்றுள்ளது)- அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகின்றான்’ என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் (ரலி) வழியாக உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்)


குறிப்பு :

ஹாரூன் பின் ஸயீத் (ரஹ்) வழி, “அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகின்றான்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: