அத்தியாயம்: 56, பாடம்: 2, ஹதீஸ் எண்: 5324

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ :‏ ‏

كَانَتِ الْمَرْأَةُ تَطُوفُ بِالْبَيْتِ وَهِيَ عُرْيَانَةٌ فَتَقُولُ مَنْ يُعِيرُنِي تِطْوَافًا تَجْعَلُهُ عَلَى فَرْجِهَا وَتَقُولُ  : الْيَوْمَ يَبْدُو بَعْضُهُ أَوْ كُلُّهُ فَمَا بَدَا مِنْهُ فَلاَ أُحِلُّهُ فَنَزَلَتْ هَذِهِ الآيَةَ ‏{‏ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ‏}‏

பெண்கள் (அறியாமைக் காலத்தில்) இறையில்லம் கஅபாவை நிர்வாணமாகச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள், “தவாஃப் (செய்யத் தக்கத் தூய) ஆடையை இரவல் தருபவர் யார்?” என்று கேட்டு, (அதைப் பெற்றுத்) தமது இன உறுப்பின் மீது வைத்துக்கொண்டு,

“இன உறுப்பில்
சிறிதளவோ முழுவதுமோ
வெளிப்படும்
இந்நாள்.

இதை
எவரும் பார்க்க நான்
அனுமதிக்க மாட்டேன்”

என்று பாடுவார்கள். எனவேதான், “நீங்கள் தொழும் மஸ்ஜித்களில் உங்களை (உங்களது தூய ஆடைகளால்) அழகாக்கிக் கொள்ளுங்கள்” எனும் (7:31) இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

தங்களது தூய்மையற்ற ஆடைகளோடு இறையில்லத்தை வலம் வரக்கூடாது என்ற எண்ணத்தில், தூய்மையான ஆடையைப் பிறரிடம்  இரவல் கேட்கும் பழக்கம் அக்காலப் பெண்களிடம் இருந்துள்ளது. தூய்மையான இரவல் ஆடை கிடைக்காத பெண்கள், நிர்வாணமாக இறையில்லத்தை வலம் வரும் வழக்கமும் நடைமுறையில் இருந்துள்ளது.

Share this Hadith: