அத்தியாயம்: 6, பாடம்: 01, ஹதீஸ் எண்: 1124

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ ‏ ‏قَالَ ‏

صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِنًى ‏ ‏وَالنَّاسُ أَكْثَرُ مَا كَانُوا فَصَلَّى رَكْعَتَيْنِ فِي حَجَّةِ الْوَدَاعِ ‏

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ ‏ ‏هُوَ أَخُو ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏لِأُمِّهِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது விடைபெறும் ஹஜ்ஜின்போது அவர்களுக்குப் பின்னால் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகத்) தொழுதேன். அந்நாளில் மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அதிகமாக இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்பு (ரலி)

குறிப்பு :

“ஹாரிஸா பின் வஹ்பு அல்குஸாஈ (ரலி), உமர் (ரலி) அவர்களின் மகன் உபைதுல்லாஹ் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஆவார்” என்று இமாம் முஸ்லிம் குறிப்பிடுகிறார்கள்.

Share this Hadith:

Leave a Comment